கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் புற்கள் வளர்ந்து சிரமதானம் செய்ய வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. 

அந்தவகையில் பாடசாலையின் அதிபர் திருமதி K.துளசிநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் 2025.03.07ஆந் திகதி அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ள புற்களை முற்றாக அழிப்பதற்கு களைக்கொல்லி வேதிப்பொருள் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.